Sunday, September 22, 2013

* காதல் என்னும் வேதனை!


காதல் என்னும் வேதனை!

உன்னைப் பார்க்கும் போதெல்லாம்

என் மனத்தில் பட்டாம்பூச்சி சிறகடிக்கிறது

உன்னுடன் பேச முயலும்போதெல்லாம்

வார்த்தைகள்சிக்கிக் கொண்டு செயலிழக்கின்றன

நம் கண்கள் கலந்து பிரிகையில்

தலை முதல் கால் வரை மின் அலை தாக்குகிறது

எப்படிச் சொல்ல என் காதலை உன்னிடம்

கவிதையில் சொல்ல நான் கம்பனில்லை

வார்த்தையில் சொல்ல நான் வசனகர்த்தா இல்லை

பாட்டில் சொல்ல நான் பாகவதன் இல்லை

ஒன்றும் செய்ய இயலாத ஒரு காதலன் நான்

எப்படிச் சொல்வேன் அன்பே என் காதலை உன்னிடம்?!


என்ன முயன்றும் உன் இதயத்தை

என்னால் திறக்க முடியவில்லை.

அன்பென்ற சாவியும் ,

கொஞ்சல் என்ற சாவியும்

கெஞ்சல் என்ற சாவியும்

கோபம் என்ற சாவியும்

புகழ்ச்சி என்ற சாவியும்

எல்லாமே பயனற்றுப் போயின!

நீயே சொல்லி விடு

எப்படித்தான் திறப்பது

உன் இதயத்தை?!


நான் பார்க்கும் உலகம்

No comments:

Post a Comment