Sunday, September 22, 2013

* மன ஊனமில்லா மணமகன் தேவை


* இஸ்லாமிய ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியவை மன ஊனமில்லா மணமகன் தேவை


மன ஊனமில்லா மணமகன் தேவை


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)


வல்ல அல்லாஹ் மணமகளுக்குமஹர் கொடுத்து மணமுடி என்று சொல்லநீ கொடுக்க வேண்டிய மஹரைபெண்ணான என்னிடம் கேட்கநீ கேட்ட மஹரை கொடுக்கஎன் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்தஉன் தாயும், உன் சகோதரியும்பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்துஎங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்நீங்கள் தெளிவாக சொன்னால்தான்அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியதுலட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்பிறை அனைத்தையும் கணக்கு எடுத்துஒரு வருட விதவிதமான சீர், நகை பின்எத்தனை பேருக்கு சாப்பாடு தருவியஎத்தனை பேருக்கு பசியாற தருவிய!(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)

மனை உள்ளது வீட்டைகட்டி கொடுத்து விடுங்கள்!(தற்பொழுது குடிசைதான் வீடாம்)என் குடும்ப சூழ்நிலையில்இந்த சம்பந்தம் அமையுமாமணமேடையில் அமருவோமாஎன்று மனதுக்குள் அழ!

என் தந்தையோ நோயின்வாசல்படியை தட்டநானோ வீட்டின் நிலைப்படியில்!எத்தனையோ பேர் என்னைபெண் பார்த்து சென்ற பிறகும்இன்னும் முதிர் கன்னியாகஉனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்கவந்தவர்களில் சிலர்என் பையன் சிகப்பு பெண்தான்பார்க்க சொல்கிறான்பெண் கருப்புதான்இருந்தாலும் நாங்கள் கேட்பதை(வரதட்சனையை) தந்து விட்டால்என் பையனைசம்மதிக்க வைத்து விடுகிறோம்!பணம் படைத்தவர்களின்கருப்பு நிற பெண் கரையேறி விடும்!பணம் இல்லா குடும்பத்துகருப்பு நிற பெண்களைகடலில் தள்ளி விடலாமா?


பெண்ணை பெற்றவன்ஜமாத்தில் லட்டர் வாங்கிஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்என்று முகம் தெரியா ஊரில்பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்பாவா குமராளி வந்திருக்கிறேன்திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதுஉதவி செய்யுங்கள் என்றுதுண்டை ஏந்தி நிற்பதைபார்த்திருக்கிறாயா?பார்த்தவுடன்கோபம் வரவில்லையா?என்ன செய்தாய் நீ?என் தாய் தந்தை மனம்கோணாமல் நடப்பேன் என்றாய்!

இளைஞனே திருமணம் முடிக்கும்நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்இதுநாள்வரை தாய், தந்தைபேச்சைகேட்காத நீ கூட திருமணபேச்சு வார்த்தையில் மட்டும்என் தாய் தந்தையின் மனம்நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!

இளைஞனே உன் தெருவில்திருமண வயதில் ஏழை பெண்ணிருக்கநீயோ பணம் படைத்த வீட்டில்பெண்ணை தேட!அவளும் திருமண வயதை தாண்டிய பிறகுவேற வழி இல்லை என்றுபிறமத பையனோடு ஓட!இப்பொழு வருகிறது உனக்கு கோபம்என் தெரு பெண்எப்படி ஓடலாம்!அவளை கண்டால் வெட்டுவேன் என்று!அவள் ஓடியதற்கு நீயும்உன்னை போன்றவர்களும்காரணம் இல்லையா?

முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடுபகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடுகொள்ளை அடிக்கிறாய் வரதட்சனைஎன்ற பெயரில் மணமகள் வீட்டில்மனசாட்சியும் இல்லை!மறுமை பயமும் இல்லை உனக்கு!

மணமகனே நான்உன்னிடம் கேட்கிறேன்நீ என்ன மஹர் தருவாய்எனக்கு - எதற்காக என்கிறாயா?உன் வீட்டில் வந்துஆயுள் முழுவதும் உனக்கும்உன் குடும்பத்திற்கும்சேவை செய்வதற்கும்!குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்நானும் தகப்பன் என்றுபெருமிதம் அடைவதற்காக!என் தாய் தந்தையைஎன் உடன்பிறந்தவர்களை, தோழிகளைநான் வாழ்ந்த இடத்தையேவிட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடுவருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்விழித்தெழுங்கள்!இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்நாளை மஹ்ஷர் பெருவெளியில்இறுதி தீர்ப்பின் நாளின்அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்என்ன பதில் சொல்வாய்தாய் தந்தையை கை காட்டுவாயா?முடியாது இளைஞர்களே!

நீங்கள் மட்டும்தான் உங்களின்காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!பிறமதக்கலாச்சாரத்தில் இருந்துநம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்இந்த வரதட்சனை என்னும் கொடுமையைஅகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்குமஹர் கொடுத்து மணமுடியுங்கள்!இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.

நான் பார்க்கும் உலகம்

No comments:

Post a Comment