Saturday, July 20, 2013

* எது சந்தோஷம்...?


எது சந்தோஷம்...?


எது சந்தோஷம்...? 
ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரமே நம்பிக்கைதான். இது நமக்கானது, இது நமக்குக் கிடைக்கும், இதை நம்பலாம், இதுதான் நமக்கு என்ற நம்பிக்கைதான் ஒவ்வொருவரையும்
உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது.

உலகமே ஒரு நாடக மேடை..அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று சொன்ன ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை. மேலே வானம், கீழே பூமி. இந்த இரண்டும்தான் நிரந்தரம்... அதுவும் கூட இன்னும் 450 கோடி ஆண்டுகள் வரைதான் -சூரியனில் அதற்குப் பிறகு ஹீலியம் தீர்ந்து போய் அண்ட சராசரமும் அழியும் வாய்ப்புள்ளதாம் - அதற்கு இடைப்பட்ட இந்த மனித வாழ்க்கை ரொம்ப சாதாரணமானது. இப்படிப்பட்ட வாழ்க்கையை முடிவு வரை ஓட்ட உதவுவது இந்த நம்பிக்கைதான்.

வாழ்க்கைக்கு மட்டுமல்ல காதலுக்கும் கூட நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒரு சின்ன இழையளவு கூட அதில் தளர்வு வந்து விடக் கூடாது. மீறி வந்து விட்டால் அந்தக் காதலே உலர்ந்து உதிர்ந்து போய் விடும்.

நீ என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறாய் 
என்னுடைய உலகத்தை நம்பிக்கையால் நிரப்புகிறாய் 
என் வாழ்க்கையை நீ மாற்றிப் போட்டாய் 
உனக்கே தெரியாமல் என்னை நிறைய மாற்றினாய். 
நீ எனக்கு அசாதாரணப் பெண் 
என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ. 
என்னை விட மதிப்பானவள் நீ 
உன் மென்மையான புன்னகையால் 
என் இதயம் முழுவதையும் இதமாக்குகிறாய் 
உன்னை, உன்னைவிட நான் அதிகம் புரிந்திருக்க 
இந்தக் காதலே காரணம் 
தொடர்ந்து என்னைக் காதலி...!

இப்படியெல்லாம் ஒரு காதலன், உணர்ந்தும், உய்த்தும் சொல்லக் காரணம் அந்தக் காதல் தந்த நம்பிக்கையும் தெம்பும்தான். ஒவ்வொரு காதலும் இப்படித்தான் - நம்பிக்கையையும், நல்ல பல விஷயங்களையும் கூடவே சேர்த்துக் கொடுத்து விட்டுத்தான் போகிறது - அது நீடித்தாலும் அல்லது அல்பாயிசில் முடிந்தாலும்.

எனக்கு எப்போதெல்லாம் மனம் கணத்துப் போகிறதோ 
உன் நினைவு வந்து லேசாக்குகிறது 
எப்போதெல்லாம் எனக்கு இதயம் வலிக்கிறதோ 
அப்போதெல்லாம் நீ வந்து லேசாக்குகிறாய்

இதுவும் காதல் கொடுக்கும் நம்பிக்கைதான்.. காதலின் நினைவும், காதலியின் நினைவும், காதலனின் நினைவும் ஒவ்வொருவருக்கும் மூச்சுக் காற்று போல. எதை வாசிக்க மறுக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் காதலை சுவாசிக்க யாரும் மறக்க மாட்டார்கள்.

நீ வந்தது என் அதிர்ஷ்டம் 
கைக்குள் வர வேண்டிய அவசியம் கூட இல்லை 
ஏனென்றால் அதையும் தாண்டி என் மனசுக்குள் எப்போதோ வந்து விட்டவள் நீ. 
ஒவ்வொரு நாளும் உன் நினைவாகவே விடிகிறது 
ஒவ்வொரு இரவும் உன் நினைவிலேயே கழிகிறது 
இது போதும் என் தேவதையே...!

அவள் பார்க்கிறாளோ இல்லையோ, அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவள் வருகிறாளோ இல்லையோ, அது கூட இவனுக்குத் தேவையில்லையாம்.. அவளது நினைவு தரும் அந்த சுகம் போதுமாம்... இதை விட ஒரு பாசிட்டிவான விஷயத்தை வேறு எது தரும், சொல்லுங்கள்...!

ஆதலினால் காதல் செய்யுங்கள்.. ஆயுசைக் கூட்டிக் கொள்ளுங்க

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

Tuesday, July 16, 2013

* திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்.....இருட்டாகும் வாழ்க்கை..


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்.....இருட்டாகும் வாழ்க்கை..

 திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் டீன்ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்திற்கான முதல் அடியாக இருக்கிறது. 



‘என் அழகிற்கும் அறிவுக்கும் என் பின்னால் இத்தனை பேர் வருகிறார்கள் பார்’ என்று, மற்றவர்களிடம் சொல்லவேண்டும் அதன் மூலம் மற்றவர்களை பொறாமைப்பட செய்யவேண்டும் என்று சில பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்ப கவலைக்கு உள்ளாகிறார்கள். 

பெண்களின் இளமைப்பருவம் கண்ணாடி போன்றது. சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். எத்தகையோ சமூக மாற்றங்களுக்குப் பிறகும் இந்தியா இன்னும் பழமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்கு காரணம், இங்குள்ள பெண்களின் தாய்மை உணர்வும், பெண்மையும் தான். 

பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்‘ அவர்கள் அறிவை விசாலப்படுத்த வேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள். 

பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடலுறவு’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும். 

அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும். பெற்றோர்களும், சமூகமும் பெண்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். 

பெற்றோர்கள் நம் சந்தோஷத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதே நேரத்தில் தவறான வழியில், முறையற்ற சந்தோஷத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரியபாரமாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. 

அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை பணத்தால் மறைக்க இயலாது. பிரபல மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.. 

“திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களில் பலர் என்னிடம் கருக்கலைப்பு செய்ய வருகிறார்கள். மருத்துவரீதியாக, மனோதத்துவரீதியாக நான் சொல்வதை புரியும் நிலையில் அவர்கள் இல்லை. முதன் முதலில் உருவாகும் கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். 

அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக் கூடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, முரண்பாடான முறையில் கலைத்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம். 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப்பிடித்துக்கொண்டு கதறியழுதார். ‘என்னால் கருவை கலைக்க முடியாது. 

மருத்துவ விஞ்ஞான முறைகளை மீறி நான் ஏதாவது செய்தால், உங்கள் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடியும்’ என்று கூறி விட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக சொன்னார். ‘கர்ப்பத்திற்கு காரணமானவன் என்னை தவிக்கவிட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டான்’ என்று அந்த பெண்ணும் அழுதாள். 

நான், ‘காலம் கடந்து வந்திருக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை துணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்தேன். அவர்கள் நான் சொன்னதை கருத்தில்கொள்ளாமல் வேறொரு மருத்துவரை பார்த்து கருக்கலைப்பு செய்து விட்டு வீடு திரும்பிவிட்டனர். பிறகு எதுவுமே நடக்காதது போல் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் முடித்து விட்டார்கள். 

அதன்பிறகு தான் ஆரம்பமானது வினையே. முதலில் கருவை கலைத்ததால் கர்ப்பப்பை வெகுவாக பாதிக்கப்பட்டு, அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்பு அவளுக்கு நடந்த கொடூரமான கருக்கலைப்பின் காரணமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார்கள்” என்கிறார், அவர். 

ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள் தான் அப்படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்து கொண்டு கவனமாக இருக்கவேண்டும். 

ஒரு பெண்ணுடன் பழகி, அவள் கர்ப்பம் ஆகிவிட்டால் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார். ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. 

‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமான செயலுக்கு பெண்கள் இடம் கொடுக்காமல் இருப்பதே நல்லது! 


Sunday, July 14, 2013

* என்னுயிரே.. என்னுயிரே...!




என்னுயிரே.. என்னுயிரே...! 

வலி மட்டும்தானா காதல்... நிச்சயம் இல்லை.. ஒவ்வொரு காதலுக்கும் ஒரு வலிமையும் இருக்கும்... வலிமை தருவதுதான் உண்மையான காதல்.
உயிர்கள் இரண்டின் சங்கமம் கொடுக்கும் சுகம் இருக்கிறதே... அது சொர்க்கத்தையும் ஓவர்டேக் செய்து விடும் இந்த சுகானுபவம். ஒவ்வொருவருக்கும் காதல் பரம சுகத்தை மட்டுமல்ல, பாரம் சுமக்கத் தேவையான பலத்தையும் கூடவே தந்து விட்டுத்தான் செல்கிறது.

உன் அருகாமை கதகதப்பை என் தோள்களில் உணர்கிறேன்.
உன் சுகந்தத்தை என் நாசிகளில் உணர்கிறேன்
உன் சிரிப்பொலியை என் காதுகளில் உணர்கிறேன்.
நான் எங்கோ... நீ எங்கோ இருந்தாலும்...

இதுதான் காதலின் அடிப்படை. உடல் ரீதியான உணர்வுகளையும் தாண்டி, இருப்பையும், நடப்பையும் தாண்டி, உள்ளங்கள் உரசிக் கொள்ளும் அந்த் தருணம் இருக்கிறதே... அடடா, அடடா.. அதுவல்லவோ சுகம்.

நீ எனக்கு விஷம்
நீ எனக்கு இனிப்பு
நீ எனக்கு துவர்ப்பு
நீ எப்படி இருந்தாலும்
எனக்கு நீ அமிர்தம்...

காதல் வந்தால் வரும் உணர்வு இது.

நீதான் என் இதயத்தைச் சுட்டாய்
நீதான் என் இதயத்தைப் பொசுக்கினாய்
நீயேதான் அதற்கு மருந்தையும் போட்டு விட்டாய்
உன் அன்பால்

காதலில் மட்டும்தான் இப்படி எப்படிப்பட்ட 'சூட்டையும்' தாங்கக் கூடிய பக்குவமும், பொறுமையும் வரும். நிறையப் பேர் சொல்வார்கள், காதலிக்க ஆரம்பித்து விட்டான், இனி இவன் அவ்வளவுதான் என்று. நிச்சயம் தவறு... காதலர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், குறிப்பாக ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள், அவன் எப்படியெல்லாம் 'பலன்' அடைந்தான் என்று தெரியும்.

மனசுக்குள் ஒரு அமைதி வரும், இதுவரை இல்லாத அளவுக்குப் பொறுமை வரும், எதையும் ரசிக்கும் மன நிலை வரும், கோபம் பறந்தோடும், குணம் கூடும், ஏன் அழகு கூட கூடும். அவனையே அவன் ரசிக்க ஆரம்பிப்பான். சுற்றியிருப்பவர்களை எல்லாம் பாசிட்டிவாக பார்க்கும் சிந்தனை வரும் - காதல் உணர்வுகள் ஒருபக்கம் அலையென பொங்கி, பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும், மறுபக்கம் இப்படிப்பட்ட மாற்றங்களும் கூடவே வந்து சேரும்.

வாழ்க்கையின் அழகான விஷயம் காதல்.. ஆயிரம் அர்த்தங்களை அது உங்களுக்குச் சொல்லித் தரும்.. மனசை காதலிக்கும்போது கிடைக்கும் சொர்க்க உணர்வு இருக்கிறதே, அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது, இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது...

பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் முடிந்து போகும்
நீயும் அப்படியே
நானும் அப்படியே
ஆனால் கதை முடியும்போது
உன் காதல் என்னுடன் ஒட்டிக்கிடக்கும்
என் உயிருடன் கலந்த உதிரம் போல
நாம் மரித்துப் போகலாம்
நம் காதல் நம்மைப் பார்த்து சிரித்து காலத்திற்கும் நிற்கும்!.

எனவே காதலை உணருங்கள், காதல் உணர்வோடு மூழ்கிப் போங்கள்.. தவறே இல்லை!

* நாட்டுக்கோழி முட்டையும் ஆண்மைக்கு நல்லதாம்...!!


நாட்டுக்கோழி முட்டையும் ஆண்மைக்கு நல்லதாம்...!!

நாட்டுக்கோழி முட்டையும்
உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால்
இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள் கிடைக்காமல் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினைவேறு இளைஞர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகிறது. எனவே சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு தேவையான ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சக்தி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சக்தி தரும் பேரிச்சை

காலை உணவுக்குப்பின் சிறிதுநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்த நாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடக்கூடாது.

அரைக்கீரை சாப்பிடுங்களேன்

சைவ உணவை சாப்பிடுபவர்கள் தினசரி உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட வேண்டும். செலரியில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் கிளாச்சியை தூண்டும். ஆண்களும், பெண்களும் செலரியை சாலட் போல சாப்பிடலாம்.

ஆண்மை அதிகரிக்க வாழைப்பழம் சிறந்த உணவாகும். இதில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழம் சக்தி தரக்கூடியது. இதில் உள்ள பி6 வைட்டமின் பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தாலும் போக்கும்.

கடல்சிப்பி

மீன் வகைகளில் எது கிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம். கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும்.

உப்புக்கண்டம்

வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் இறைச்சியை உப்பு மஞ்சள் பூசி காயவைத்துப்பதப்படுத்திய உப்புக்கண்டம் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள். பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும். ஆனால் அவற்றிர்காக மெனக்கெடவேண்டுமே.

நாட்டுக்கோழி முட்டை

இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். முட்டையில் வைட்டமின்கள் பி6, பி5 உள்ளது. இது மனஅழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்யும். பச்சை முட்டையை சாப்பிட சக்தி அதிகரிக்கும். ஆண்களுக்கு கிளர்ச்சி ஏற்படும்.

இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.

தினசரி உறவு வேண்டாமே

புதிதாக திருமணமானவர்கள் தினசரி உறவு கொள்வதில் சிக்கல் இல்லை. அதேசமயம் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்த பின்னரும் தினசரியோ, வாரம் 3 அல்லது 4 நாட்களுக்கோ உறவில் ஈடுபடுவது ஆற்றலை அழித்துவிடும் என்று எச்சரிக்கின்றனர். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும். மேலும் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆபாச நூல்களைப் படிப்பது, இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதால் மனமும், உடலும்கெட்டுப்போகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Saturday, July 13, 2013

* வாழ்வில் வெற்றிக்கான வழி






 எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம். 



* பட்டினி கிடக்காதீர்கள். 

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். 

* சோம்பலை துரத்தி அடியுங்கள். 

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். 

* அதிக நேரம் உறங்காதீர்கள். 

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள். 

* பொறாமை அறவே இருக்கக் கூடாது. 

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். 

* பேராசை படாதீர்கள். 

* மகிழ்ச்சியாக இருங்கள். 

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. 

* தைரியமாக இருங்கள். 

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள். 

Thursday, July 4, 2013

* ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!


ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.

* குப்பைத்தொட்டியில் குழந்தை


குப்பைத்தொட்டியில் குழந்தை


காதல் என்ற போதையிலே.
பாதை தவறி போனவரே.

காதலன் என நம்பி
காமுகனிடம் சிக்கியவரே.

கலவி என்ற சுகம் கண்டு
கற்ப்பிழந்து போனவரே.

கொண்டவன் கை கழுவ
கலங்கி இதயம் வெடித்தவரே.

கற்பு என்பது சொல் அல்ல
காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள

காமம் என்ற ஒரு சொல்லில்
உலகம் அது இயங்கவதில்லை.

தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.
தண்டனை பச்சிளம் குழந்தைக்கு.

தொப்புள் கொடி அறுத்த உடனே
சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ.

எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

கை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி.

அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.


Wednesday, July 3, 2013

* நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?


நீங்கள் ..

நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?

நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்!’
நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்?’
எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அப்பா-அம்மா?’
என்னைப் புரிந்துகொள்ள ஏன் இந்த உலகத்தில் ஒருவர்கூட இல்லை?’
‘என் எதிர்காலத்துக்கு எந்தவிதத்திலும் பயன் தராத விஷயங்களை ஏன் பள்ளியிலும் கல்லூரியிலும் நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்?’
என்னை ஏன் இவ்வளவு அசிங்கமாகப் படைத்திருக்கிறான் இறைவன்?’
‘நான் ஏன் நார்மலாக இல்லை?’
மூன்று கேள்விகளுக்கேனும் ‘ஆம்’ என்பது உங்கள் பதிலாக இருந்தால், சந்தேகமே வேண்டாம்… நீங்கள் நார்மலாகத்தான் இருக்கிறீர்கள்!
பதின் பருவத்தில் இப்படியான எண்ணங்கள் அலைக்கழிப்பதுதான் அந்தப் பருவத்தின் இயல் பான மனநிலை என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ். உலகின் 96 சதவிகித டீனேஜ் பருவத்தினர் தங்கள் தோற்றம், உடல் அமைப்பில் திருப்தியற்று இருக்கிறார்களாம்.
இதுபோலவேதான் நண்பர்கள், பெற்றோர்கள், காதலன்/காதலி ஆகியோருடனான உறவுகளையும் குழப்பிக்கொண்டு, எப்போதும் ஒருவித அவஸ்தை மனநிலையிலேயே இருக்கிறார்கள்.
அப்படியானவர்களுக்கு, தன் புத்தகம்மூலம் தோள் தட்டும் தோழனாக டிப்ஸ் தருகிறார் ஆண்ட்ரு. மிக எளிமையான ஆங்கிலம், குட்டிக் குட்டிப் படங்கள் மூலம் பெரிய உண்மைகளை எளிதில் புரியவைக்கிறார்.
வாழ்க்கை ஏன் கசக்கிறது?
உங்களையும் அறியாமல் நாக்கைக் கடித்துக் கொள்கிறீர்கள். வலிக்கிறது! கொதிக்கும் தேநீர் என்று தெரியாமல் ஒரு வாய் குடித்துவிடுகிறீர்கள். சுள்ளென்று சுடுகிறது. பென்சில் சீவும் போது, விரலை பிளேடு வெட்டிவிடுகிறது.
ரத்தம் வெளியேறி எரிகிறது. இவை எல்லாம் உடலை வருத்தும் காயங்கள். அந்தக் காயங்கள் ஏற்படுத்தும் வலி, ‘ஏதோ தப்பு. நீ செய்துகொண்டு இருக்கும் விஷயத்தை மேற்கொண்டு தொடராமல் இருப்பது நல்லது!’ என்று உணர்த்தும் சமிக்ஞை.
‘வலி’ என்ற ஒரு அலாரம் இல்லாவிட்டால், என்ன நடக்கும்? ரத்தம் வர வர… நாக்கைக் கடித்துக்கொண்டே இருப்பீர்கள். வாய் பொத்துப்போன பிறகும் அந்தத் தேநீரைக் குடித்துக்கொண்டே இருப்பீர்கள். ரத்தம் வழிந்த பிறகும் நிறுத்தாமல், பென்சிலை கூராக்கிக்கொண்டு இருப்பீர்கள். இதே லாஜிக்தான் மனதை வருத்தும் காயங்களுக்கும்!
உங்கள் மனதை ஏதோ ஒரு நடவடிக்கை அல்லது சம்பவம் வருத்துமானால், அதைத் தொடராதீர்கள். மேலும் மேலும் அதனால் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்கத்தான், அந்தச் சம்பவம் உங்கள் மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது.
பிறகு ஏன் அதைத் தொடர வேண்டும்? உள்ளுக்குள் சோகமாக உணர்ந்தால், நீங்கள் யோசிக்கும் விதத்தையே மாற்றிக்கொள்ளுங்கள்.
மற்றவர் மீது பொறாமைகொள்ளும்போதோ, கேலி கிண்டல் செய்து மற்றவரைக் காயப்படுத்தும்போதோ, நமது சந்தோஷத்துக்காக அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும்போதோ, பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் போதோ… நமது மனது வலிக்கும். அலாரம் அடித்துவிட்டது. விழித்துக்கொள்ளுங்கள்!
படம் பார்த்து, பாடம் படிக்கலாமா?
‘ஒருவன் நாயிடம் இருந்து தப்பிக்க முற்படுகிறான். அவனுடைய சட்டையின் நுனிப்பகுதியை நாய் கடித்து இழுத்திருக்கிறது.
கோபமாக இருக்கும் அந்த நாய்க்கு வாலும் ஒரு காலும் வெள்ளை நிறம். ஒரு காது சிவப்பு நிறம். அவனுடைய சட்டையில் சிவப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள். ஒற்றைக் காலில் நிற்கிறான் அவன்!’
இதைப்படித்துக் கிரகித்து அந்தக் காட்சியைக் கற்பனை செய்ய உங்களுக்கு 20 நொடிகளேனும் பிடிக்கும். அதுவே, இந்தப் படத்தைப் பாருங்கள்…
சட்டென்று, பச்சக்கென்று மனதில் பதிந்துவிட்டதா? பல காலமாகச் சொல்லி வருவதுதான். வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு ஓவியம் அல்லது கார்ட்டூன் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும்.
‘20-07-1969 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் ஆளாகக்கால் பதித்தார்’ என்று மனனம் செய்து மறந்துபோவதைக் காட்டிலும், இப்படி நீங்களாக ஒரு கார்ட்டுன் வரைந்தால்… எப்படி இருக்கும்?
அந்தத் தேதி உங்களுக்கு மறக்கவே மறக்காது!
ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?
எவ்வளவுதான் ‘அலர்ட்’ ஆக இருந்தாலும், பல சமயங்களில் எல்லோரும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நமது முறை வரும்போது பஸ் பாஸ் கவுன்ட்டரில் ‘உணவு இடைவேளை’ என்று போர்டு விழுவது, அத்தனை பேர் தப்பும் தவறுமாகச் செய்து இருக்கும்போது நமது ரெக்கார்ட் நோட் குளறுபடிகளை மட்டும் புரொஃபஸர் கண்டுபிடித்துத் திட்டுவது, மனதுக்குப் பிடித்தவளிடம் காதலைச் சொன்னதும், ‘என்னை உனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சேன்.
அதான் போன மாசம் அருண் புரபோஸ் பண்ணப்போ, ‘ஓ.கே’ சொல்லிட்டேன்!’ என்று அவள் கண்ணைக் கசக்குவது. சிறிதும் பெரிதுமாகத் தினமும் நம்மை ஏமாற்றங்கள் கடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?
1. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி எப்போதும் கெட்டதாகவே நடக்கிறது?’ என்று உள்ளுக்குள் புழுங்குவேன்! – இப்படி நினைத்து சுய பச்சாதாபத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான எந்த ஓர் உருப்படியான செயலிலும் உங்கள் மனம் கவனம் செலுத்தாது!
2. ‘அது எனது தப்பு அல்ல!’ என்று பழியை அடுத்தவர் மீது சுமத்துவதும் ஒரு விதத் தப்பிக்கும் மனோநிலைதான். அது உங்கள் தப்பாக இல்லாவிட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே!
3. ‘இதில் இருந்து நான் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?’ என்று உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொண்டால்… சபாஷ்! இதுதான் மேற்கொண்டு அதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் தடுக்கும் மனோநிலை.
நமது ஒவ்வொரு ஏமாற்றமும், கல் மேல் விழும் உளி செதுக்கல் என்று நினைத்துக்கொண்டால், நம்மை நாமே செதுக்கி எடுக்கலாம்.
தண்டிக்கப்படுவதற்காக, நாம் இந்த உலகத்தில் அவதரிக்கவில்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்களதேங்க்ஸ் :


* வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

09. கஷ்டம் தான் … ஆன முடியும்.

10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.

11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.

15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

* ஓடிப் போவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்


ஓடிப் போவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்


திருமண ஏற்பாடு சாதாரண விஷயமல்ல. மாப்பிள்ளை பார்ப்பதில் தொடங்கி, நகை சேர்ப்பது, மண்டபம் புக்கிங் செய்வது, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது, பத்திரிகை அடிப்பது, உறவினர்களை அழைப்பது என ஏகப்பட்ட வேலைகள். அதோடு திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பதைபதைப்பும் இருக்கும். இப்படி எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, திருமணம் நடக்கப் போகும்போது, திடீரென மணப்பெண் ஓடிப் போனால் எப்படி இருக்கும்? அதனால் எத்தனை பேருக்கு வேதனை? அப்படித்தான் நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில், மணப்பெண் காதலனுடன் ஓடி விட்டார். விழுப்புரம் மாவட்டம் சித்தாள் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.

கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவி. பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. ஜெயபாரதியின் மாமன் மகன். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க 2 வாரம் முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. நாளை திருமணம். தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஜெயபாரதியின் அப்பாவும், அம்மாவும் உறவினர்களுக்கு பத்திரிகை வைக்க புறப்பட்டு சென்றனர். வீட்டில் ஜெயபாரதி மட்டும் இருந்தார். மதியம் வீடு திரும்பிய போது, மகளை காணாமல் திடுக்கிட்டனர். உறவினர்கள் வீடுகள் உள்பட அக்கம்பக்கத்தில் தேடினர். பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தையும் காணவில்லை. தோழிகளிடம் விசாரித்த போது அதே ஊரை சேர்ந்த பிஎஸ்சி 2ம் ஆண்டு மாணவர் காமராஜ் என்பவரை ஜெயபாரதி காதலித்து வந்தது தெரிய வந்தது.

கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது இருவரும் பேசி வந்துள்ளனர். வீட்டில் திடீரென திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெயபாரதி, காதலனுடன் ஓடியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தப்பட்ட மாணவி, கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் காமராஜ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரு வீட்டாரும் சோகத்தில் உள்ளனர். திருமண பேச்சை எடுக்கும்போதே, பெண்ணின் சம்மதத்தை கேட்க வேண்டும். வேறு யாரையாவது காதலித்தால் பெண்களும் அதை பெற்றோரிடம் கூறி விட வேண்டும். சரி, சரி என தலையை ஆட்டி விட்டு, கடைசி நேரத்தில் பெற்றோரை தவிக்க விட்டு ஓடிப் போகக் கூடாது. இதனால் மணமகன் உள்பட எத்தனை பேருக்கு அவமானம்? ஓடிப்போகும் காதலர்கள் இதை ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


Monday, July 1, 2013

* ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!!!


ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!!!


இந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள். ஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ஆண்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. முக்கியமாக அவர்களின் கடந்த காலத்தை,பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் சில நினைவுகளை தங்களுக்குள் இருக்கவே விரும்புவார்கள். அதனை யாரிடமும் கூற விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தையும் கூறினால், அவர்களது வாழ்க்கைக்கே உலை வைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். சரி, இப்போது ஆண்கள் அப்படி மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று சிலவற்றை பார்க்கலாமா? 

ஸ்ட்ரிப் கிளப்ஸ் (strip clubs)


பல ஆண்களுக்கு பெண்களின் கவர்ச்சி நடனங்களை, கிளப்களில் பார்ப்பது அலாதி விருப்பமாக இருக்கும். உங்களுக்கு கணவராக வரப் போகின்றவர், நண்பர்களுடன் சேர்ந்து பெண்களின் ஆடை அவிழ்ப்பு நடனத்தை கண்டு கழிக்க சென்றிருக்கலாம். ஆனால் அதனை பற்றிய சிறு துப்பை கூட அளிக்கமாட்டார். ஏனென்றால், எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் திருமணத்துக்கு முன் இந்த மாதிரி செயல்களில் ஈடுப்பட்டார் என்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இத்தகைய விஷயத்தை சொல்லிக் கொள்ளமாட்டார்கள். 

உணர்ச்சிவசப்பட்டவராக இருக்கலாம் 

தான் செய்த தவறு தன் மனைவிக்கு தெரிந்த பின் அவர்களின் கண்ணீர் பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கும். அதனால் ஆண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். எனவே ஆண்கள் தங்களை ஒரு பலசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும் காட்டவே விரும்புகிறார்கள். மேலும் கண்ணீர் விடுவதும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதும், பெண்கள் செய்யக்கூடியவை என்றும் இன்னும் சில ஆண்கள் எண்ணுகிறார்கள். 

ஆபாசப் படங்கள் 

ஆபாசப் படங்களை ஏற்கனவே பார்த்ததாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக ஆண்களுக்கு ஆபாச விஷயங்களிலும், பாலின்பத்திலும் அதிக ஈடுபாடு இருந்த போதிலும், அதனை வெளிப்படையாக தங்கள் மனைவியிடம் கூற மறுப்பார்கள். 

அம்மா பிள்ளை 

பல ஆண்கள் தங்களின் தாயால் செல்லம் கொடுக்கப்பட்டு கெட்டு போய் உள்ளனர். அதனால் திருமணம் ஆன பின்பு அல்லது ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கும் போது, அந்த பெண்ணை தன் தாயுடன் ஒப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இது அவர்கள் இருவருக்குள்ளும் மன ஸ்தாபத்தை ஏற்படச் செய்யும். எனவே ஆண்களுக்கு தான் தாய்க்கு செல்லப் பிள்ளையாக இருப்பது தெரிந்திருந்தாலும், அது துணைக்கு தெரியக் கூடாது என்று நினைப்பர். 

விசித்திரமான கனவுகள் 

தன் கனவுகளை மனைவியோடு பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் சில வகை கனவுகளும், கற்பனைகளும் கேட்பதற்கு, துணையை மட்டமாக எண்ணத் தூண்டலாம். அதனால் சில கனவுகளை ஆண்கள் சொல்லத் தயங்குவார்கள். ஏனெனில் அதனை கேட்டால் அவரை விட்டு போகக் கூட பெண்கள் தயங்க மாட்டீர்கள்.

* நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி அதுவே திரையில் செய்யும்போது நடிகை! இதுவா சமுதாயம்


நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி அதுவே திரையில் செய்யும்போது நடிகை! இதுவா சமுதாயம்



நாம் அறிந்து ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். இவளை சமூகம் 
என்னவென்று அழைக்கும்? விபச்சாரி என்றுதானே. ஆனால்இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அது ஆணாக இருந்தால் அவன் நடிகன். அவர்கள் செய்வது கலைசேவை!

ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பழிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாகக் காட்டினால் அதற்கு கைதட்டுகிறது. இவர்கள் போடும் எச்சங்களை உண்டு பிழைக்கும் அந்தக் கூத்தாடிகள் நாளடைவில் இந்த மக்களின் அன்புக்குரியவர்களாக... இஷ்ட தெய்வங்களாக.... மாறி விடுகிறார்கள்.
எந்த விபச்சாரத்தை தனது சகோதரியோ, மகளோ, மனைவியோ செய்யும்போது இவர்களுக்கு தலைவெடித்து விடுமோ அதே சமூகம் இந்த விபச்சாரிகளை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கிறது. எந்த அளவுக்கென்றால் இவர்களுக்கென சிலைகள் வடிக்கப் படுகின்றன, கோவில்கள் கட்டப் படுகின்றன, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


சற்றும் பொறுப்புணர்வே இல்லாத சுரணையற்ற இந்த சமூகப் போக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் ஓரளவுக்குக் காணப்பட்டாலும் மிகமிகத் தீவிரமாக காணப்படுவது நம் தமிழகத்தில்தான் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதை அறியாமையின் சிகரம் என்பதா? சமூக சீரழிவின் உச்சகட்டம் என்பதா?சாந்தை இணையம்

திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் .பல தரப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.

இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக 'நடிக்கும்' இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் சாந்தை இணையம் ஒருபுறம். இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.

இந்தத் திரைக்கூத்தாடிகள்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்குத் தரக்கட்டுப்பாட்டு நிபுணர்கள்!சாந்தை இணையம் விளம்பரங்களில் இவர்கள் தலைகாட்டி சான்றிதழ் கொடுத்தால்தான் அவை விற்பனை ஆகுமாம்! இந்த இழிபிறவிகளின் நடை உடை பாவனைகள்தான் வளரும் சமூகத்தின் முன்மாதிரிகளாம்! .இவர்கள் ஆதரவு கொடுத்தால்தான் நாட்டை ஆளும் மக்களின் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்! இவர்கள்தான் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒருபுறம் இலவசங்களைக் காட்டி மறுபுறம் நாட்டுவளங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்களாம்! என்ன ஒரு அவமானம்!