Thursday, June 13, 2013

* காட்டெருமையின் சிறுநீர் கலக்கப்பட்ட சக்தி பாணங்களும் கவரப்படும் இன்றைய சந்ததியினரும்!


காட்டெருமையின் சிறுநீர் கலக்கப்பட்ட சக்தி பாணங்களும் கவரப்படும் இன்றைய சந்ததியினரும்!

லண்டன்: மனிதர்களின் களைப்பைப் போக்கி அவர்களை உற்சாகமாக வைத்திருப்பதற்காக பண்டைய காலம் தொட்டு நீராகாரங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து வருகின்றன.

தேநீர், கோப்பி, இஞ்சி மற்றும் எழுமிச்சை கலந்த சாறுகள், குளிர்பானங்கள், மோர் இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.
எனினும், இன்றைய இளைஞர் சமுதாயத்தை கட்டுப்போட்டிருக்கும் உற்சாக-சக்தி பாணங்களில் (Energy Drinks) மறைமுகமான பல அபாயங்கள் காத்திருக்கின்றன.

‘ரெட்புல்’, ‘மொன்ஸ்டர்’, ‘ரிலண்டர்ஸ்’ மற்றும் இவற்றைப் போன்று தகர பேணிகளில் அடைத்து வரும் ‘எனர்ஜி ட்ரிங்க்ஸ்’ எனக் குறிக்கப்பட்ட அத்தனை பாணங்களிலும் ‘டோரின்’ (Taurine / Ta-Urine) எனப்படும் பதார்ரத்தம் சேர்க்கப்பட்டு வருகின்றது.

டோரின்’ எனப்படுவது காட்டெருமையின் சிறுநீர் மற்றும் விந்தினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஓர் இரசாயனப் பதார்த்தமாகும். 1800 களில் இப்பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டு, மேலைத்தேய குக்கிராமங்களில் வடிசாராயம் போல், பதப்படுத்தி தனது வேலைக் களைப்பைப் போக்க விவசாயிகள் இதனை அருந்தி வந்தனர்.

1990களின் பிற்பகுதிகளில் இருந்து உலகில் பிரபல்யமடைந்து வரும் ‘டோரின்’ கலக்கப்பட்ட இவ்வாறான சக்தி பாணங்கள் உலகச் சந்தைகளில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதுடன் ஓர் சிறு கடையிலும் விரைவில் தீர்ந்துவிடக்கூடடிய ஓர் விற்பனைப் பதார்த்தமாக இத்தகைய சக்தி பாணங்கள் இன்று இருந்து வருகின்றன.

இவற்றை அருந்துவதால், குறித்த சில நிமிடங்கள் ஏதோ ஓர் உற்சாகம் போன்றதொரு மாற்றத்தைக் காணும் போதிலும், வேறு எந்த மாற்றத்தையும் உடலில் காணமுடியாமல் இருப்பது இத்தகைய பாணங்களின் பலவீனமாக இருந்து வருகின்றன. இப்படி இருந்தும் ஏன் உலகச் சந்தையில் அதிக முக்கியத்துவத்தைப் இத்தகைய பாணங்கள் பெறுகின்றன என்ற கேள்வி எழலாம்.

அவற்றுக்கு முக்கியமாக பின்வரும் காரணங்களைக் குறிப்பிடமுடியும்.

மனிதர்களின் உலவியல் ரீதியான தாக்கம்:

உலகம் வேகமாக முன்னேறி வரும் ஓர் காலத்தில் இருந்து வருகிறது. எந்த நாட்டிலும் எவ்வளவு உழைத்தாலும் போதாது என்ற மனப்பக்குவம் மக்களிடத்தில் இருந்து வருகிறது. தனக்கு தொடர்ச்சியான வேலை, நீண்ட பிரயாணம் இவற்றின் காரணமாக ஏற்படும் அசதி, சோர்வின் காரணமாக மக்கள் தனது இழந்த சக்தியை மீள்பெறும் நோக்கில் இத்தகைய பாணங்களை அருந்தி வருகின்றனர்.

மனிதனின் தாவும் மனநிலை:

இதுவரை தேநீர், கோப்பி, குளிர் பாணம் என்று அருந்திவந்த மனிதன், தனது பயன்பாட்டை மாற்றிக்கொள்ளும் வேறு பொருளை நோக்கித் தாவுவது மனித இயற்கை. எனவே இவ்வாறான புதியவகையான சக்தி பாணங்களை தாவும் மனப்பான்மையில் மனிதன் அருந்த அவாக் கொள்கின்றான்.

பாலியல் ரீதியான கவர்ச்சி விளம்பரம்:

இளம் சமுதாயத்தினரை கவர்ந்துகொள்ள வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டு விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. தாம்பத்தியத்தில் அதிக நேரம் உற்சாகமாக ஈடுபடுவதற்கும், சோர்வில்லாமல் தங்களது விடயங்களை மேற்கொள்வதற்கும் இத்தகைய பாணங்கள் உறுதுணையாக இருப்பதாக இளைஞர் சமுதாய மத்தியில் கவர்ச்சி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இதற்காக, காட்டெருமை, பாயும் குதிரை என்பவற்றின் படங்களை அச்சிட்டு, இலகுவாக மக்கள் மனங்களை வென்றெடுக்கின்றனர். இவை போதாதென்று, தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதவர்கள் கூட அதிக விலை கொடுத்து இத்தகைய பாணங்களை வாங்கிச் செல்வதையும் காணமுடிகிறது.

விளம்பரத்தால் மனிதர்களை ஏமாற்றி அதிக இலாபம் சம்பாதிக்கும் இத்தகைய வியாபார நிறுவனங்கள், கோடிக் கணக்கில் சம்பாதித்து, தங்களது புத்தியைத் தடவிக்கொள்கின்றனர்.

ஓர் கோப்பி அல்லது தேநீரில் கிடைக்கும் சந்தோசமும் உற்சாகமும் கூட இத்தகைய பாணங்களில் கிடைப்பதில்லை என்பது மறைந்திருக்கும் ஓர் உண்மை என்பது பலருக்கு தெரிவதில்லை!

தொடர்ச்சியாக இவ்வாறான சக்தி பாணங்களை அருந்திவருவோருக்கு, இரத்தக் கொதிப்பு நோய்கள், தூக்கமில்லாமல் அவதிப்படுதல், குடற்புண்கள் உட்பட தோல் வியாதிகளும் ஏற்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்து-ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சுகாதார ஆராய்ச்சுப்பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, காட்டெருமையின் விந்து மற்றும் சிறுநீர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ‘டோரின்’ எனப்படும் இத்தகைய இரசாயனப் பாணங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment