Wednesday, June 5, 2013

* ஆண்களை எளிதில் கவர வேண்டுமா?


ஆண்களை எளிதில் கவர வேண்டுமா?


 ஆண்களுக்கு பெண்களை எளிதில் பிடிக்க பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலானோர் பெண்களின் புற அழகை பார்த்து ஆண்கள் மயங்குகிறார்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான ஒரு கருத்து. எப்படியெனில் ஆண்கள் பெண்களின் புற அழகை ரசிக்க மட்டுமே செய்கிறார்களே தவிர, அவர்களை கவரவில்லை. 



மேலும் ரசிப்பதற்கும், கவர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ரசிப்பது என்பது பார்த்த நொடியில் மட்டும் தான் இருக்கும். ஆனால் கவர்வது என்பது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். எனவே ஒரு ஆண் தன்னைப் பார்த்து ரசிக்கிறான் என்று சந்தோஷப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களை கவர என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து முயற்சி செய்யுங்கள். 

புன்னகை 

ஆண்களை கவர்வதில் பெண்களின் புன்னகை முக்கிய அங்கம் வகிக்கிறது. புன் சிரிப்புடைய முகத்தையே ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சோகமாக முகத்தை வைத்திருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிப்பதில்லை. புன்னகை என்பது பெண்ணின் மிக பெரிய சொத்து. எனவே எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க தவறாதீர்கள். 

வெளிப்படையாக இருங்கள் 

பெரும்பாலும் வெளிப்படையாக பேசும் பெண்களையே ஆண்கள் விரும்புகின்றனர். குறுகிய மனபான்மையுடைய பெண்களை அவர்கள் விரும்புவதில்லை. தனக்கு ஏற்பட்டசவால்களை இஷ்டத்துடன் எதிர்கொள்ளும் பெண்களாக இருக்க வேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றி பெண்கள் நேர்மையாக இருக்க வேண்டும். 

நம்பிக்கை 

எந்த செயலையும் நம்பிக்கையுடனும் எதிலும் சுயமாக முடிவு எடுக்கும் பெண்களாக இருந்தால் ஆண்களை எளிதில் கவரலாம். 

நேர்மறை எண்ணங்கள் 

எதிர்மறை எண்ணங்கள் உள்ள பெண்களால் கண்டிப்பாக ஆண்களை கவர முடியாது. ஆகவே எப்போதும் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

கவரும் வண்ணம் பேசுதல் 

ஆண்களை கவர்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அவர்களை கவரும் வண்ணம் பேசுவது தான். அதிலும் அமைதியுடன் இருக்கும் பெண்களை விட, நன்கு கலகலவென்று பேசும் பெண்களைத் தான் அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும்.

No comments:

Post a Comment